23/12/2018
மஞ்சள் கால் பிரியும் நேரமே கார்த்திகைதான்ங்க..
நீங்க வைகாசியில மஞ்சள் நடவினாலும் சரி,
ஆவணியல நடவினாலும்
கிழங்கு பிரியும் காலம் இதுதான்..
நாங்க வைகாசி கடைசியில் நடவு
செய்து முழுசா பத்து மாதம் நிறைவடைந்த பின்பே
அதாவது பங்குனி மாதம்தான் அறுவடையே செய்வோம்..
நிறையாபேர் விலை இறங்கிடும் அதுக்குள்ளே தோண்டி விற்றுவிடனும்னு
எட்டு ஒன்பதாவது மாதத்துலேயே குறை பிரசவத்திலேயே தோண்டிடுவாங்க..
அப்படி செய்ய கூடாது.
ஏன்னா நிறைமாதத்தில் பிறந்த குழந்தைக்கும், குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைக்கும் எப்படி வேறுபடுதோ அதேதான் நம்ம பயிரிலும் நடக்கும்..
இன்னும் சில பேர் "பசு மஞ்சள் "இப்போ உங்களிடம் கிடைக்குமானு கேட்குறாங்க..
முதலில் பசு மஞ்சள்னா என்னானு தெரிஞ்சுக்குவோம்..
தை பொங்கலுக்கு
கல் அடுப்புகூட்டி,
அதில் வாகை விறகு வச்சு,
தீமூட்டி,
மண்பானையில் அரிசி போட்டு,
பானையை சுற்றி
எட்டு மாதமான மஞ்சளை தாளுடன்
பிடிங்கு வந்து
பொங்கப்பானையை சுற்றி கட்டிவிட்டு,
பொங்கல் வைத்து
பொங்கியவுடன் இறக்கி வைத்து,
பானையை சுற்றி கட்டியிருந்த எட்டு மாத மஞ்சளை அப்படியே சாப்பிடும் போது
அதில் மருத்துவகுணம் இருப்பதாக சொல்றாங்க..
அதுதான் பசுமஞ்சள்..
காலப்போக்கில் இந்த முறை மருவி,
பசு மஞ்சள்னா அறுவடையின் போது கிடைக்கும் மஞ்சள்னு நிறையபேருக்கு தவறான புரிதல் இருக்கு..
அதுக்காக பத்து மாதங்கள் முடிந்து அறுவடை செய்யும் மஞ்சளுக்கு மருத்துவகுணங்கள் இருக்காதா னு நினைக்க கூடாது..
நச்சில் குளிப்பாட்டாதா எந்த மஞ்சளையும் அப்படியே சாப்பிடலாம்.
புற்று போன்ற செல்களை அழிக்கும் ஆற்றல் மஞ்சளுக்கு இருக்கு..
சரி அப்போ எதுக்கு விறகு அடுப்பில் பொங்கல் வைக்கனும்னு சொல்றாங்கனா,
வாகை மரத்து பட்டையில் பொங்கல் வைத்து
தீ மூட்டும் போது
அந்த சாம்பல் பொங்கலில் விழுந்து
அதை நாம் உண்ணும் போது அதிலும் மருத்துவ குணம் நிறைந்து இருக்காம்..
ஆனா இதே எரிவாயு அடுப்பில் சமைத்தால் கிடைக்குமா..??
கிடைக்கவே கிடைக்காதுங்க..
அவசர உலகில் முழுசா நம்மால
இயற்கை பக்கம் திரும்ப முடியலைனாலும்
கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சுக்கிட்டாலே
இயற்கை நம்மை தன் பக்கம் அழைத்துக்கொண்டு போகும் என்பதுதான் நிதர்சனம்..
நன்றி Thiru Murthy அவர்கள்
நல்லதை பகிர்வோம்
வாழ்க வளமுடன்...