புனித வளனார் ஆலயம்,அம்பாசமுத்திரம்

  • Home
  • India
  • Ambasamudram
  • புனித வளனார் ஆலயம்,அம்பாசமுத்திரம்

புனித வளனார் ஆலயம்,அம்பாசமுத்திரம் நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டதைப்போலவு? உழைக்க மனமில்லாதவன் உண்ணலாகாது

ஆலயம் அறிவோம்நம் ஆலயத்தில் உள்ள பாடுபட்ட சுருபத்தை சுற்றி அகழ்விளக்கு வடிவத்தில் மின் விளக்குகள் அமைந்துள்ளது. அவ்வாறு அ...
19/05/2018

ஆலயம் அறிவோம்

நம் ஆலயத்தில் உள்ள பாடுபட்ட சுருபத்தை சுற்றி அகழ்விளக்கு வடிவத்தில் மின் விளக்குகள் அமைந்துள்ளது. அவ்வாறு அதில் 33 விளக்குகள் இடம்பெற்றுள்ளது. இயேசு கிறிஸ்து இவ்வுலகில் பிறந்தது முதல் சிலுவையில் மரித்தது வரை இவ்வுலகில் வாழ்ந்தது மொத்தம் 33 ஆண்டுகள். அதன் குறியீடாகவே நம் ஆலயத்தில் 33 விளக்குகள் இடம்பெற்றுள்ளது.

மலரும் நினைவுகள்நம் ஆலயம் கட்டப்பட்டு கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்குள் இப்புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம். காலமும் சூழ்நிலை...
13/05/2018

மலரும் நினைவுகள்

நம் ஆலயம் கட்டப்பட்டு கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்குள் இப்புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம். காலமும் சூழ்நிலையும் தெரியவில்லை. ஆனால் அதில் உள்ள இளைஞர்களும் சிறுவர்களும் இன்றைய குடும்ப தலைவர்களாகவும், சிலர் ஆலய நிர்வாகிகளாகவும்.....

அம்பாசமுத்திரம் புனித சூசையப்பர் ஆலயத்தின் 2018 ஆம் ஆண்டு திருவிழா. அனைவரும் வருகை தந்து சூசை தந்தையின் ஆசீர் பெற்று செல...
22/04/2018

அம்பாசமுத்திரம் புனித சூசையப்பர் ஆலயத்தின் 2018 ஆம் ஆண்டு திருவிழா. அனைவரும் வருகை தந்து சூசை தந்தையின் ஆசீர் பெற்று செல்லுமாறு அன்போடு அழைக்கின்றோம்....

30/03/2018

அன்பானவர்களே உயிர்ப்பு பெருவிழா திருவிழிப்பு திருப்பலி வழிபாடுகள் 11 மணிக்கு தொடங்கும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன் (தூய சூசையப்பர் ஆலயம் அம்பை ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா திருப்பலி இரவு பதினொரு மணிக்கு துவங்கும்)தயவு செய்து பகிரவும் இவண் பங்குத்தந்தை

புனித வெள்ளி ஆண்டவருடைய திருப்பாடுகளின் கொண்டாட்டம்    மிகப் பழைமையான வழ்க்கப்படி, இன்றும் நாளையும் திருச்சபை திருவருட்ச...
30/03/2018

புனித வெள்ளி

ஆண்டவருடைய திருப்பாடுகளின் கொண்டாட்டம்

மிகப் பழைமையான வழ்க்கப்படி, இன்றும் நாளையும் திருச்சபை திருவருட்சாதனங்களைக் கொண்டாடுவதில்லை.

சிலுவை திரிகள் பீடத்துகில் அனைத்தும் அகற்றப்பட்டு, பீடம் வெறுமையாயிருக்கும்.

பிற்பகலில், குறிப்பாக மூன்று மணி அளவில் திருப்பாடுகளின் வழிபாடு நடைபெறும். மக்களின் வசதிக்கேற்ப, இதற்குப் பிந்தின நேரத்தையும் தேர்ந்துகொள்ளலாம். வழிபாடு மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும்: இறைவாக்கு வழிபாடு, திருச்சிலுவை ஆராதனை, திருவிருந்து.

இன்று இறைமக்களுக்கு இச்சடங்கில்மட்டும் திருவுணவு கொடுக்கலாம். சடங்கில் பங்கெடுக்க முடியாத நோயாளிக்கும் எந்நேரத்திலும் திருவுணவு கொண்டுபோகலாம்.

திருப்பலிக்குரிய சிவப்பு நிற உடைகள் அணிந்த குருவும் திருத்தொண்டரும் பீடத்தின்முன் வந்து, வணக்கம் செலுத்தி, முகம் குப்புற விழுந்து அல்லது வசதிக்கேற்ப முழந்தாட் பணிந்து இருப்பார்கள்: எல்லாரும் சிறிது நேரம் மௌனமாக மன்றாடுவர்.

பின் குருவும் பணியாளரும் தத்தம் இருக்கைக்குச் செல்வர். குரு அங்கு மக்களை நோக்கி நின்று, கைகுவித்துக் கீழுள்ள மன்றாட்டுகளில் ஒன்றைச் சொல்வார்.

பொது முன்னுரை
சுமைசுமந்து சோர்ந்திருப்போரே எல்லோரும் என்னிடம் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் அளிப்பேன் என்று அனைவரையும் அன்பு செய்தவருக்கு, புதுமைகள் பல செய்தவருக்கு, அநீதியை, ஆதிக்க சக்திகளை எதிர்த்து போராடியவர்க்கு, கிடைத்த மாபெரும் பரிசு அவமானத்தின் சின்னம் சிலுவை. ஆனால் இயேசு நம்மீது கொண்ட அன்பினால் அதையும் ஏற்றுக்கொண்டார். தன்னுயிரையே தியாகம் செய்தார். அன்பின் உச்சக்கட்டம் பிறருக்காக தன் உயிரைக் கொடுப்பதுதான் அதைவிட மேலான அன்பு வேறு இல்லை என்பதை இதோ மாபரன் இயேசு நிருபித்து விட்டார். விண்ணிற்கும், மண்ணிற்கும் இடையில் சிலுவையில் பலியான செம்மறியாக உயர்த்தப்பட்டிருக்கிற இயேசுவைப் பார்த்து மீட்புப் பெற நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம். அவமானத்தின் சின்னமாக இருந்த சிலுவை இயேசுவின் தியாக பலியால் மீட்பின் சின்னமாக மாறியது. எனவே, இயேசுவின் பாடுகளையும் இறப்பையும் சிந்தித்தவர்களாக இந்த வழிபாட்டில் பக்தியோடு பங்கு கொள்வோம். நம் ஆண்டவர் இயேசுவின் மரணத்தால் தாய்த் திருச்சபை துக்கத்தில் மூழ்கி ஈரப்பதை வெறுனையான பீடமும், எரியாத மெழுகுவத்திகளும், ஒலிக்காத மணிகளும் நமக்கு நினைவூட்டுகின்றன. இன்றைய வழிபாடானது நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. இறைவார்த்தை வழிபாடு, பொது மன்றாட்டுகள், திருச்சிலுவை ஆராதனை, நற்கருணை விருந்து. முழு கவனத்தோடு பங்கு பெற்று நமக்காக இறந்த இயேசுவின் பாடுகளின் பயனை பெற்று செல்வோம். அனைவரும் எழுந்து நின்று குருவை வரவேற்போம்.
(குருவானவர் முகம் குப்புற விழுந்து செபிக்கும் போது)
தற்போது குருவானவர் இயேசுவின் பாடுகளையும் இரத்தக்களங்களையும் நினைவுப்படுத்தி செந்நிற உடை அணிந்து முகம் குப்புற விழுந்து நம் அனைவரோடும் சேர்ந்து செபிக்கிறார். இந்த நிகழ்வு கிறிஸ்துவின் மரணத்தால் வந்த துயரத்தையும், அவருக்கு முன்னால் நமது தகுதியில்லாத தன்மையையும் வெறுமையையும் காட்டுகிறது. அதோடு நாம் அனைவரும் அவரைச் சார்ந்து வாழுகிறோம் என்பதையும் காட்டுகிறது. நாமும் மண்டியிட்டு அமைதியாக குருவோடு செபிப்போம்.
எழுந்தவுடன் இப்போது குரு இயேசுவின் பாடுகளால் கிடைத்த மீட்பின் பலனை நமக்குக் கொடையாக கொடுத்தருளுமாறு தந்தையாம் இறைவனிடம் செபிப்பார். அனைவரும் எழுந்து நின்று செபிப்போம்.

மன்றாட்டு:(செபிப்போமாக அல்லது மன்றாடுவோமாக என்று சொல்வதில்லை)

இறைவா, உம் திருமகன் கிறிஸ்து உம் மக்கள் எங்களுக்காகத் தமது இரத்தத்தைச் சிந்தி உயிர் நீத்துப் பாஸ்கா மறைநிகழ்ச்சியை நிறைவேற்றினார்.
அவரது சாவிகளை இன்று சிறப்பாக நினைவுகூர்ந்து கொண்டாடுகின்ற நாங்கள் எங்கள் சிந்தனை, சொல, செயல் அனைத்தாலும் இத்திருவழிபாட்டில் ஆழ்ந்து பங்கேற்கச் செய்தருளும். எங்கள்.

எல். ஆமென்.

(அல்லது)

இரக்கமுள்ள இறiவா,

முதல் மனிதரின் பாவத்தின் விளைவான சாவுக்குத் தலைமுறை தலைமுறையாக நாங்கள் ஆளாகித் தவிக்கின்றோம். எங்கள் ஆண்டவராகிய உம் திருமகன் கிறிஸ்துவின் பாடுகளினால் நீவிர் அந்தச் சாவினை அழித்தீர். இயற்கை நியதிப்படி பழைய ஆதாமின் சாயாலைத் தாங்கியிருக்கும் நாங்கள்,உமது அருளால் புனிதமடைந்து, புதிய ஆதாமாகிய கிறிஸ்துவின் சாயலைத் தாங்கி, அனைத்திலும் அவரைப்போல் ஆகிடச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்

முதற் பகுதி இறைவாக்கு வழிபாடு

முதல் வாசக முன்னுரை (எசாயா 52: 13 - 53: 12)
எசாய இறைவாக்கினர் நான்கு இடங்களில் துன்புறும் ஊழியன் என்ற கருத்தில் கவிதை வடிவில் இயேசுவின் பாடுகளை முன்னுரைத்துள்ளார். இயேசு கிறிஸ்து துன்புறும் ஊழியர் என்பதையும், அவர் பாடுகள் பட்டு, துன்பங்களை ஏற்று எவ்வாறு இவ்வுலகத்தை மீட்க தன்னையே கையளிக்கப் போகிறார் என்பதை முதல் வாசகத்தில் வாசித்து தியானிப்போம்.

இறைவாக்கினர் எசாயா திருநூலிருந்து வாசகம்:

13 இதோ, என் ஊழியர் சிறப்படைவார். அவர் மேன்மைப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்டு, பெரிதும் மாட்சியுறுவார்.

14 அவரைக் கண்ட பலர் திகைப்புற்றனர். அவரது தோற்றம் பெரிதும் உருக்குலைந்ததால் மனித சாயலே அவருக்கு இல்லாதிருந்தது. மானிடரின் உருவமே அவருக்கு இல்லை.

15 அவ்வாறே, அவர் பல பிறஇனத்தாரை அதிர்ச்சிக்குள்ளாக்குவார். அரசர்களும் அவரை முன்னிட்டு வாய்பொத்தி நிற்பர். ஏனெனில் தங்களுக்குச் சொல்லப் படாததை அவர்கள் காண்பர். தாங்கள் கேள்விப்படாததை அவர்கள் புரிந்து கொள்வர்.

அதிகாரம் 53

1 நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்? ஆண்டவரின் ஆற்றல் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?

2 இளந்தளிர்போலும் வறண்டநில வேர்போலும் ஆண்டவர் முன்னிலையில் அவர் வளர்ந்தார். நாம் பார்ப்பதற்கேற்ற அமைப்போ அவருக்கில்லை. நாம் விரும்பத்தக்க தோற்றமும் அவருக்கில்லை.

3 அவர் இகழப்பட்டார். மனிதரால் புறக்கணிக்கப்பட்டார். வேதனையுற்ற மனிதராய் இருந்தார். நோயுற்று நலிந்தார். காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார். அவர் இழிவுபடுத்தப்பட்டார். அவரை நாம் மதிக்கவில்லை.

4 மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார். நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார். நாமோ அவர் கடவுளால் வதைக்கப்பட்டு நொறுக்கப்பட்டவர் என்றும் சிறுமைப் படுத்தப்பட்டவர் என்றும் எண்ணினோம்.

5 அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார். நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார். நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார். அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்.

6 ஆடுகளைப் போல நாம் அனைவரும் வழிதவறி அலைந்தோம். நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம். ஆண்டவரோ நம் அனைவரின் தீச்செயல்களையும் அவர்மேல் சுமத்தினார்.

7 அவர் ஒடுக்கப்பட்டார். சிறுமைப்படுத்தப்பட்டார். ஆயினும், அவர் தம் வாயைத் திறக்கவில்லை. அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும் உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார்.

8 அவர் கைது செய்யப்பட்டு, தீர்ப்பிடப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டார். அவருக்கு நேர்ந்ததைப்பற்றி அக்கறை கொண்டவர் யார்? ஏனெனில், வாழ்வோர் உலகினின்று அவர் அகற்றப்பட்டார். என் மக்களின் குற்றத்தை முன்னிட்டுக் கொலையுண்டார்.

9 வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை. வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை. ஆயினும், தீயவரிடையே அவருக்குக் கல்லறை அமைத்தார்கள். செத்தபோது அவர் செல்வரோடு இருந்தார்.

10 அவரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார். அவர் தம் உயிரைக் குற்றநீக்கப்பலியாகத் தந்தார். எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார். ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும்.

11 அவர் தம் துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார். நேரியவராகிய என் ஊழியர் தம் அறிவால் பலரை நேர்மையாளராக்குவார். அவர்களின் தீச்செயல்களைத் தாமே சுமந்து கொள்வார்.

12 ஆதலால், நான் அவருக்கு மதிப்பு மிக்கவரிடையே சிறப்பளிப்பேன். அவரும் வலியவரோடு கொள்ளைப் பொருளைப் பங்கிடுவார். ஏனெனில், அவர் தம்மையே சாவுக்கு கையளித்தார். கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார். ஆயினும் பலரின் பாவத்தைச் சுமந்தார். கொடியோருக்காகப் பரிந்து பேசினர்.

இது ஆண்டவரின் அருள்வாக்கு
இறைவா உமக்கு நன்றி

தியானப்பாடல் : திருப்பாடல் 31: 2,6 12-13, 15-16, 17, 25

பல்லவி: தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்

ஆண்டவரே உம்மிடம் அடைக்கலம் புகுகிறேன்
ஒருநாளும் ஏமாற்றம் அடைய விடாதேயும்
உம்முடைய நீதியின்படி என்னை விடுவித்தருளும்.
உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன் ஆண்டவரே
வார்தையில் தவறாத இறைவா
நீர் என்னை மீட்டருள்வீர்

என் எதிரிகள் அனைவரும்டையவும் பழிச்சொல்லுக்கு நான் ஆளானேன்
என் அயலாரின் நகைப்புக்கு இலக்கானேன்
எனக்கு அறிமுகமானவர்களின் அச்சத்துக்குரியவன் ஆனேன்
வெளியே என்னைக் காண்கிறவர்கள் என்னைவிட்டு ஓடுகின்றனர்
இறந்து போனவன் போல் பிறர் கண்களுக்கு மறைவானேன்
உடைந்து போன மட்கலத்தைப் போலானேன்

ஆனால் ஆண்டவரே நான் உம்மீது நான் உம்மீது நம்பிக்கை வைக்கன்றேன்
நீரே என் கடவுள் என்றேன்
என்கதி உம் கையில் உள்ளது ஆண்டவரே
என் எதிரிகளிடமிருந்தும் என்னைத்
துன்புறுத்து வோரிடமிருந்தும்
நீர் என்னை விடுவித்தருளும்

கனிந்த உம் திருமுகத்தை எனக்குக் காட்டியருளும்
உம் அருளன்பைக் காட்டி என்னை ஈடேற்றும்
ஆண்டவர் மீது நம்பிக்கையுள்ளவர்களே
மனத்திடன் கொள்ளுங்கள்
உங்கள் நெஞ்சம் உறுதி கொள்ளட்டும்

இரண்டாம் வாசக முன்னுரை (எபி 4 : 14 - 16, 5 : 7-9)
இயேசுவை நித்திய தலைமை குருவாக படம்பிடித்துக்காட்டி அவர் எவ்வாறு பழைய ஏற்பாடடின் குருக்களிலிருந்து மாறுபட்டவராக இருக்கின்றார் என்பதையும், பழைய ஏற்பாட்டின் பலிபொருட்கள் குறையுடையதாய் இருக்கும்போது, புதிய பலிப் பொருளாகிய இயேசு எப்படி குறைவில்லாத செம்மறியாக இருக்கிறார் என்பதையும் விளக்கும் இரண்டாம் வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்

14 எனவே, வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால் நாம் அறிக்கையிடுவதை விடாது பற்றிக்கொள்வோமாக!

15 ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல@ மாறாக, எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர்@ எனினும் பாவம் செய்யாதவர்.

16 எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.

7 அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவி சாய்த்தார்.

8 அவர் இறைமகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்.

9 அவர் நிறைவுள்ளவராகி, "தமக்குத் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.

இது ஆண்டவரின் அருள்வாக்கு
இறைவா உமக்கு நன்றி

நற்செய்திக்கு முன் வசனம் பிலிப்பியர் 2:8-9

8 தம்மைத் தாழ்த்திச் சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிபவரானார்.

9 ஆதலால் தான் கடவுள் அவரை எல்லாருக்கும் மேலாய் உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்

பின்பு, அருளப்பர் எழுதிய திருப்பாடுகளின் வரலாறு (18:1-19:42) வாசிக்கப்படும்.(வாசகம் இங்கே)

(முடிவில் வசதிக்கேற்ப, சுருக்கமாக மறையுரையாற்றலாம். பின் சிறிது நேரம் மௌனமாக மன்றாட குரு மக்களை அழைக்கலாம்).

விசுவாசிகளின் மன்றாட்டு

இறைவாக்கு வழிபாடு விசுவாசிகளின் மன்றாட்டுடன் முடிவடையும். அதன் முறையாவது: திருத்தொண்டர்வாசக மேடையில் நின்றுகொண்டு, பின்வரும் மன்றாட்டின் கருத்தை அறிவிப்பார். அக்கருத்துக்காக அனைவரும் சிறிது நேரம் மௌனமாகச் செபிப்பர். பின் குரு, இருக்கையருகில் அல்லது தேவையானால் பீடத்தருகில் நின்றுகொண்டு, கைகளை விரித்து மன்றாட்டைச் சொல்வார். விசுவாசிகளின் மன்றாட்டின்போது மக்கள் முழந்தாளில் இருக்கலாம் அல்லது நிற்கலாம்.

குருவின் மன்றாட்டிற்குமுன் இறைமக்கள் (எடுத்துக்காட்டாக: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் என்று) ஒன்றாக ஆர்ப்பரிக்க வேண்டும் அல்லது திருத்தொண்டர்: முழந்தாளிடுங்கள் - எழுந்திருங்கள் என்று அழைப்பு விடுக்க, எல்லாரும் முழந்தாட்பணிந்து பணிக்கலாம்.

மிக முக்கியமானதொரு பொதுத் தேவைக்காகத் தனிப்பட்ட கருத்தையும் சேர்த்துக்கொள்ள ஆயர் அனுமதி அல்லது கட்டளை தரலாம்.

இங்குத் தரப்பட்ட கருத்துகளில் இடத்திற்கும் காலத்திற்கும் மிகப் பொருத்தமானவற்றைக் குரு தேர்ந்துகொள்ளலாம்: ஆனால் விசுவாசிகளில் மன்றாட்டிற்குப் பொதுவாகக் குறிப்பிட்ட கருத்துகளை விட்டுவிடக்கூடாது (இவற்றைப் "பொதுப் போதனை", எண் 46இல் காண்க)

விசுவாசிகளின் மன்றாட்டு முன்னுரை
நமக்காக பலியாகி நம்முடைய தேவைகளுக்காக தந்தையிடம பரிந்துரைத்து செபிக்க இயேசு சிலுவையில் கரங்களை விரித்துள்ளார். எனவே இத்தகைய சக்தி வாய்ந்த இணைப்பாளராக இயேசுவைப் பெற்றுள்ள இந்த வேளையில் நம் செபம் கட்டாயம் கேட்கப்படும் என்ற நம்பிக்கையில் திருச்சபை 10 பெரிய மன்றாட்டுகளைச் செபிக்கிறது. ஒவ்வொரு மன்றாட்டுக்கு பிறகும் ஆண்டவரை எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் என்று பாடி செபிப்போம்.

1. தூய திருச்சபைக்காக:

அன்புச் சகோதரர்களே சகோரிகளே இறைவனின் புனித திருச்சபைக்காக மன்றாடுவோம்.

நம் இறைவனாகிய ஆண்டவர் திருச்சபைக்கு அமைதியும் ஒற்றுமையும் அளித்து, அதனைப் பேணிக்காக்க வேண்டுமென்றும், நாம் கலக்கமின்றி அமைதியான வாழ்வு நடத்தி எல்லாம் வல்ல இறைத்தந்தையை மகிமைப்படுத்த நமக்கு அருள்புரிய வேண்டுமென்றும் மன்றாடுவோமாக.

மௌன மன்றாட்டு. பின்பு குரு:

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, கிறிஸ்து வழியாக உமது மாட்சியை உலக மக்களுக்கெல்லாம் வெளிப்படுத்தினீர்: நீர் இரக்கத்துடன் ஏற்படுத்திய திருச்சபையைப் பேணிக்காத்து, அது உலகெங்கும் பரவி, உறுதியான விசுவாசம் கொண்டு, உமது திருப்பெயரை என்றும் புகழ்வதில் நிலைத்திருக்கச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல். ஆமென்.

2. திருத்தந்தைக்காக

நம் திருத்தந்தை (பெயர். . . )க்காக மன்றாடுவோம்.

துலைமை ஆயர் நிலைக்கு அவரைத் தேர்ந்தெடுத்த நம் இறைவனாகிய ஆண்டவர் எவ்வகைத் தீங்குமின்றி அவரைப் பேணிக்கர்ப்பாராக. இதனால் அவர் இறைமக்களை வழிநடத்தித் திருச்சபை வளம் பெறச் செய்யவேண்டுமென்று மன்றாடுவோமாக.

மௌன மன்றாட்டு. பின்பு குரு:

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உமது திட்டப்படியே அனைத்தும் அமைந்திருக்கின்றன.உமது அதிகாரத்தினால் ஆளப்படும் கிறிஸ்தவ மக்களாகிய எங்கள் வேண்டுதலைக் கேட்டு, திருத்தந்தையின் தலைமையின்கீழ் நாங்கள் விசுவாசத்தில் வளரும்படி அவரைப் பரிவுடன் காத்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல். ஆமென்.

3. திருச்சிபையில் பல்வேறு நிலைகளில் உள்ளவர்களுக்காக

இங்குக் குறிப்பிடவேண்டிய ஆயர்களையும், குறிப்பிடும் முறையையும் "பொதுப் போதனை" எண் 109இல் காண்க.

நம் ஆயர் (பெயர்...)க்காகவும், திருச்சபையிலுள்ள எல்லா ஆயர்கள், குருக்கள், திருத் தொண்டர்க்காகவும், விசுவாசிகள் அனைவர்க்காகவும் மன்றாடுவோமாக.

மௌன மன்றாட்டு. பின்பு குரு:

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உம்முடைய ஆவியால் திருச்சபை அனைத்தும் அர்ச்சிக்கப்பெற்று, ஆளப்படுகின்றது. உம்முடைய திருப்பணியாளர்கள் அனைவர்க்காகவும் நாங்கள் செய்யும் செபத்தை கனிவோடு கேட்டருளும். எல்லா நிலையினரும் உமது அருள்துணையால்
உமக்கு உண்மையோடு ஊழியம் புரிவார்களாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல். ஆமென்.

4.திருமுழுக்குப் பெறத் தயாரிப்புச் செய்வோர்க்காக

திருமுழுக்குப் பெறத் தயாரிப்புச் செய்வோர்கக்காகவும் மன்றாடுவோம்.

நம் இறைவனாகிய ஆண்டவர் தம் இரக்கத்தைப் பொழிந்து அவர்களுடைய இதயங்களைத் திறந்துவிடுவாராக் இவ்வாறு அவர்கள், புதுப்பிறப்பளிக்கும் திருமுழுக்கினால், பாவங்களுக்கெல்லாம் மன்னிப்படைந்து, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் வாழவேண்டுமென்று மன்றாடுவோமாக.

மௌன மன்றாட்டு. பின்பு குரு:

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, புதிய மக்களைச் சேர்த்துத் திருச்சபை வளம்பெறச் செய்கின்றீர். திருமுழுக்கு பெற இருப்போரிடம் விசுவாசமும் அறிவும் வளரச் செய்தருளும். இவர்கள் திருமுழுக்கு நீரினால் புதுப்பிறப்படைந்து, தேர்ந்துகொள்ளப்பட்ட உம்முடைய மக்களின் திருக்கூட்டத்தில் சேர்ந்துகொள்வார்களாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல். ஆமென்.

5. கிறிஸ்துவர்களின் ஒற்றுமைக்காக

கிறிஸ்துவில் விசுவாசம் கொண்டுள்ள நம் சகோதரர் சகோதரிகள் அனைவர்க்காகவும் மன்றாடுவோம். நம் இறைவனாகிய ஆண்டவர் தம்மில் விசுவாசம் கொண்டோர் அனைவரையும் உண்மையின் பாதையில் வழிநடத்தித் தமது ஒரே திருச்சபையில் கூட்டிச்சேர்த்துக் காத்தருள வேண்டுமென்று மன்றாடுவோமாக.

மௌன மன்றாட்டு. பின்பு குரு:

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, பிரிந்தவற்றை இணைப்பவரும் இணைந்தவற்றைப் பேணிக்காப்பவரும் நீரே. உம் திருமகனின் மந்தையைக் கனிவுடன் கண்ணோக்கியருளும். ஒரே திருமுழுக்கினால் திருநிலைப்படுத்தப்பெற்ற அனைவரையும், விசுவாசத்தின் முழுமையால் இணைத்து, அன்பின் பிணைப்பால் ஒன்றுசேர்த்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

6. யூத மக்களுக்காக

யூத மக்களுக்காக மன்றாடுவோம்.

முற்காலத்தில் அவர்களோடு பேசிய நம் இறைவனாகிய ஆண்டவர், தமது திருப்பெயரின் மீதுள்ள அன்பிலும் தமது உடன்படிக்கை மீதுள்ள பற்றுறுதியிலும் இவர்களை வளர்ச்சியடையச் செய்தருள வேண்டுமென்று மன்றாடுவோமாக.

மௌன மன்றாட்டு. பின்பு குரு:

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா,
ஆபிராகாமுக்கும் அவர்தம் வழிவந்தோர்க்கும். நீர் அளித்த வாக்குறுதிகளை நினைவுகூரும். உமது திருச்சபையின் வேண்டுதலுக்குத் தயவாய்ச் செவிசாய்த்து, முதன்முதலாக நீர் தேர்ந்துகொண்ட இம்மக்கள் உமது மீட்பின் நிறைவைப் பெற அருள்வீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல். ஆமென்

7. கிறிஸ்துவில் இன்னும் விசுவாசம் கொள்ளாதவர்களுக்காக

கிறிஸ்துவில் இன்னும் விசுவாசம் கொள்ளாதவர்களுக்காகவும் மன்றாடுவோம்.

இவர்கள் தூய ஆவியின் ஒளியைப் பெற்று மீட்புப் பாதைக்கு வந்துசெர வேண்டுமென்று மன்றாடுவோமாக.

மௌன மன்றாட்டு. பின்பு குரு:

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, கிறிஸ்துவை இன்னும் ஏற்றுக்கொள்ளாத மக்கள் உம் திருமுன் நேர்மையான உள்ளத்தோடு நடந்து, உண்மையைக் கண்டடைவார்களாக. நாங்களும் உம் வாழ்வின் மறையுண்மைகளை மேன்மேலும் ஆழமாகக் கண்டுணர்வோமாக. மேலும் உமது அன்புக்கு இவ்வுலகில் சிறந்த சாட்சிகளாய் விளங்குமாறு, ஒருவர் ஒருவரை அன்புசெய்து வாழவும், பிற சமய சகோதரர் சகோதரிகளோடு அன்புறவு கொண்டு ஒழுகவும் வரமருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல். ஆமென்.

8. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்காக

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்காகவும் மன்றாடுவோம்.

இவர்கள் நேர்மையான உள்ளத்தோடு நன்னெறியில் வாழ்ந்து, உண்மைக் கடவுளைக் கண்டடையுமாறு மன்றாடுவோமாக.

மௌன மன்றாட்டு. பின்பு குரு:

என்றும் வாழும் எல்லாம் வல் இறைவா, மாந்தர் அனைவரும் எப்போதும் உம்மையே விரும்பித் தேடவும், உம்மை அடைவதால் அமைதி பெறவுமே நீர் அவர்களைப் படைத்தீர். இவ்வுலகில் ஏற்பாடும் எல்லாவித இடையூறுகளுக்கு நடுவிலும், அவர்கள் அனைவரும் உமது அன்பைக் காட்டும் அறிகுறிகளையும்,
உம்மை விசுவாசிப்போர் ஆற்றும் நற்செயல்களின் சான்றுகளையும் கண்டுணர்ந்து, உம்மை ஒரே மெய்யங்கடவுள் என்றும் மக்களின் தந்தை என்றும்மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல். ஆமென்.

9. நாடுகளை ஆள்வோர்க்காக

நாடுகளை ஆளும் அனைவர்க்காகவும் மன்றாடுவோம்.

உலக மக்கள் அனைவரும் உண்மையான அமைதியும் உரிமை வாழ்வும் பெறும்பொருட்டு, நம் இறைவனாகிய ஆண்டவர் தம் திருவுளப்படி இவர்களுடைய சிந்தனை, சொல், செயல் அனைத்தையும் ஆண்டு நடத்தியருள வேண்டுமென்று மன்றாடுவோமாக.

மௌன மன்றாட்டு. பின்பு குரு:

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, மனித இதயங்களின் எதிர்ப்பார்ப்புகளை நீர் அறிவீர் அவர்களின் உரிமைகளை நீரே பேணிக்காக்கின்றீர். உலகமெங்கும் அமைதியும் பாதுகாப்பும் வளமான வாழ்வும் சமய உரிமையும் நிலைபெறுமாறு, எங்கள் தலைவர்களை உம்முடைய ஞானத்தால் நிரப்பி, அவர்கள் உண்மையான மக்கள் தொண்டர்களாக விளங்கிடச் செய்வீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல். ஆமென்

10. துன்புறுவோர்க்காக

அன்புச் சகோதரர்களே சகோதரிகளே, துன்புறும் அனைவர்க்காகவும் மன்றாடுவோம்.

எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனின் அருளால், உலகிலிருந்து தவறுகள் அகலவும், பிணிகள் நீங்கிப் பஞ்சம் ஒழியவும், சிறைகள் திறக்கப்பட்டுத் தளைகள் தகர்க்கப்படவும், வழிப்போக்கர் பாதுகாப்புப் பெறவும், பயணம் செய்வோர் நலமாக வீடு திரும்பவும், நோயுற்றோர் நலம் பெறவும், இறக்கின்றவர் மீட்பின் நிறைவு பெறவும் மன்றாடுவோமாக.

மௌன மன்றாட்டு. பின்பு குரு:

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, துயருற்றோர்க்கு ஆறதலும், வருந்துவோர்க்குத் திடனும் நீரே. எத்தகையே துன்ப வேளையிலும் உம்மை நோக்கிக் கூவியழைப்போரின் வேண்டுதலைக் கேட்டருளும்.இவர்கள் தங்கள் தேவைகளில் நீர் இரக்கத்துடன் துணைபுரிவதைக் கண்டு மகிழ்வார்களாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல். ஆமென்.

திருச்சிலுவை ஆராதனை முன்னுரை

இப்போது திருச்சிலுவை ஆராதனை ஆரம்பமாகிறது. இயேசு கிறிஸ்துவின் தியாக பலியில் சிலுவை வெற்றியின் சின்னமாக, மீட்பின் சின்னமாக, தியாகத்தின் சின்னமாக மாறியது. சுமார் 4ம் நூற்றாண்டில் இயேசுவின் பாடுபட்ட சிலுவைக் கண்டுபிடிக்கப்பட்டது. அன்றிலிருந்து திருச்சிலுவைக்கு ஆராதனை செய்து முத்தி செய்யும் முறை உருவானது. அதன் அடிப்படையில் குருவானவர் மூடப்பட்டிருக்கும் திருச்சிலுவையை பீடத்தை நோக்கி பவனியாக கொண்டுவருவார். குருவானவர் மூடப்பட்டிருக்கும் சிலுவையை சிறிது சிறிதாக முதலில் வலதுகரம், பிறகு இடதுகரம், இறுதியில் முழுவதும் அகற்றி திருச்சிலுவை மரம் இதோ என்று பாடி ஆராதனை செய்ய அழைப்பார் அப்போது நாம் அனைவரும் சேர்ந்து ‘வருவீர் ஆராதிப்போம்’ என பாடுவோம்.
குருக்களும் பீடச்சிறுவர்களும் திருச்சிலுவையை முத்தி செய்வார்கள். இன்றைய வழிபாட்டின் இருதியில் நாம் அனைவரும் திருச்சிலுவையை முத்திசெய்வோம்.

திருச்சிலுவையைக் காட்டும்போது அழைப்பு

குரு: திருச்சிலுவை மரம் இதோ! இதிலேதான் தொங்கியது உலகத்தின் இரட்சணியம் (3 முறை)

எல். வருவீர், ஆராதிப்போம்.(3 முறை)

திருச்சிலுவை ஆராதனை

திருச்சிலுவை ஆராதனைக்குக் குருவும் திருப்பணியாளரும் இறைமக்களும் ஒழுங்காகப் பவனி போல வந்து வணக்கம் செலுத்திச் செல்வர். முழந்தாட்படிந்தோ, நாட்டுப் பழக்கத்திற்கேற்ப வேறு வகையிலோ, உ-ம்: முத்திசெய்தோ கைகளில் தொட்டுக் கண்களில் (நெற்றியில்) ஒற்றிக்கொண்டோ இவ்வணக்கத்தைக் காட்டலாம்.

ஆராதனையின்போது ஆண்டவரே யாம் என்னும் பல்லவி, திருமுறைப்பாடுகள் அல்லது வேறு பொருத்தமான பாடல்கள் பாடப்படும். அப்போது ஆராதனைபுரிந்தவர்கள் எல்லாரும் அமர்ந்திருப்பர்.

ஒரே ஒரு சிலுவைதான் ஆராதனைக்கு வைக்கப்படவேண்டும். பெருங் கூட்டத்தின் காரணமாக ஒவ்வொருவரும் தனித்தனியே ஆராதனை செலுத்த முடியாதெனில். ஒருசிலர் ஆராதனை செய்தபின் குரு சிலுவையை எடுத்துப் பீடத்தின்முன் நின்றுகொண்டு. சிற்றுரையாற்றி அனைவரையும் ஆராதனை செய்ய அழைப்பார். அவர் சிலுவையைச் சிறிது நேரம் உயர்த்திப் பிடித்துக்கொண்டிருக்க, எல்லாரும் மௌனமாக ஆராதிப்பர்.

ஆராதனைக்குப்பின் சிலுவை பீடத்திற்கு அருகில் அதற்குரிய இடத்தில் வைக்கப்படும். திரிகள் அதன் இருபுறம் அல்லது பீடத்தின்மீதோ அருகிலோ வைக்கப்படும்.

திருச்சிலுவை ஆராதனையின்போது பாடல்கள்:

எனது ஜனமே நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன் சொல்
எதிலே உனக்குத் துயர் தந்தேன் எனக்குப் பதில் நீ கூறிடுவாய்

எகிப்து நாட்டில் நின்றுன்னை மீட்டுக்கொண்டு வந்தேனே
அதனாலோ உன் மீட்பருக்கு சிலுவை மரத்தை நீ தந்தாய்

நாற்பது ஆண்டுகள் நான் உன்னை பாலைவனத்தில் வழிநடத்தி
உமக்கு மன்னா உணவூட்டி வளமிகு நாட்டினுள் வரச்செய்தேன்
அதனாலோ உன் மீட்பருக்கு சிலுவை மரத்தை நீ தந்தாய்

நான் உனக்காக எகிப்தியரை அவர் தம் தலைச்சன் பிள்ளைகளை
வதைத்து ஒழித்தேன் நீ என்னை கசையால் வதைத்து கையளித்தாய்

பாரவோனைச் செங்கடலிலாழ்த்தி எகிப்தில் நின்றுன்னை விடுவித்தேன்
நீயோ என்னைத் தலைமையாம் குருக்களிடத்தில் கையளித்தாய்

நானே உனக்கு முன்பாகக் கடலைக் திறந்து வழி செய்தேன்
நீயோ எனது விலாவை ஓர் ஈட்டியினாலே திறந்தாயே

மேகத் தூணில் வழிகாட்டி உனக்கு முன்னே யான் சென்றேன்
நீயோ பிலாத்தின் நீதி மன்றம் என்னை இழுத்து சென்றாயே

பாலைவனத்தில் மன்னாவால் நானே உன்னைக் உண்பித்தேன்
நீயோ என்னைக் கன்னத்தில் அடித்து கசையால் வதைத்தாயே

இனிய நீரைப் பாறை நின்று உனக்குக் குடிக்க தந்தேனே
நீயோ பிச்சும் காடியுமே எனக்கு குடிக்கத் தந்தாயே

கானான் அரசரை உனக்காக நானே அடித்து நொறுக்கினேன்
நீயோ நாணல் தடி கொண்டு எந்தன் தலையில் அடித்தாயே

அரசருக்குரிய செங்கோலை உனக்குத் தந்தகு நானன்றோ
நீயோ எந்தன் சிரசிற்கு முள்ளின் முடியைத் தந்தாயே

உன்னை மிகுந்த வன்மையுடன் சிறந்த நிலைக்கு உயர்த்தினேன்
நீயோ என்னை சிலுவை மரத்தில் தொங்க வைத்தாய்

நம்பிக்கை தரும் சிலுவையே நீ மரத்துள் சிறந்த மரமாவாய்
உன்னைப் போன்ற தழை பூ கனியை எந்தக் காவும் ஈந்திடுமோ
இனிய சுமையை இனிய ஆணியால் இனிது தாங்கும் மரமே நீ

மாட்சிமை மிக்க போரின் வெற்றி விருதை நாவே பாடுவாய்
உலக மீட்பர் பலியதாகி வென்ற விதத்தைக் கூறியே
சிலுவைச் சின்னமதைப புகழ்ந்து செயத்தின் கீதம் ஓதுவாய்

தீமையான கனியைத் தின்று சாவிலே விழுந்த நம்
ஆதித் தந்தைக்குற்ற தீங்கை கண்டு நொந்த சிருஷ்டிகர்
மரத்தால் வந்த தீங்கை நீக்க மரத்தை அன்றே குறித்தனர்

கசந்த காடி அருந்திச் சோர்ந்து முட்கள் ஈட்டி ஆணிகள்
மென்மை உடலைத் துளைத்ததாலே செந்நீர் பெருகிப் பாயவே
விண்ணும் மண்ணும் கடலும் உலகும் அதனால் தூய்மை ஆயின

வளர்ந்த மரமே உன் கிளை தாழ்த்தி விரைத்த உடலைத் தளர்த்துவாய்
இயற்கை உனக்கு ஈந்த வைரம் இளகி மென்மை ஆகி நீ
உயர்ந்த வானின் அரசர் உடலின் வருத்தம் தணித்து தாங்குவாய்

மரமே நீயே உலகின் விலையைத் தாங்குகத் தகுதியாகினை
திருச்செம்மறியின் குருதி உன்மேல பாய்ந்து தோய்ந்த தாதலால்
புயில் தவிக்கும் உலகிற் கெல்லாம் புகலிடம் நீ பேழை நீ

பரம திரித்துவ இறைவனுக்கு முடிவில்லாத மங்களம்
தந்தை மகனும் தூய ஆவியும் சரிசமப் புகழ் பெறுகவே
அவர் தம் அன்பின் அருளினாலே நம்மைக் காத்து மீட்கின்றார்

தயை செய்வாய் நாதா என் பாவங்ளை நீக்கி

அன்புடனே ஏழை என்மேல் இரக்கம் வையும்
அனுதபித்து என்பிழையை அகற்றுமையா
பாவமதை நீக்கி என்னை பனிபோலாக்கும்
தோஷமெல்லாம் தீர்த்து என்னை தூய்மையாக்கும்

என்குற்றம் நானறிவேன் வெள்ளிடை மலைபோல்
தீவினையை மறவாதென் மனது என்றும்
உம் புனிதத்தை போக்கி நான் பாவியானேன்
நீர் தீமையென்று கருதுவதை துணிந்து செய்தேன்

உள்ளத்தில் உண்மையை நீர் விரும்புகிறீர்
என் ஆத்துமத்தில் அந்தரத்தில் அறிவையூட்டும்
என்பாவம் தீர்ப்பாய் உன் தூய்மையாவேன்
பனிவெண்மைக்கு உயர்வாகப் புனிதமாவேன்

ஆணிகொண்ட உம் காயங்களை அன்புடன் முத்தி செய்கின்றேன்
பாவத்தாலுமைக் கொன்றேனே ஆயனே என்னை மன்னியும்

வலது கரத்தின் காயமே அழகு நிறைந்த இரத்தினமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

இடது கரத்தின் காயமே கடவுளின் திரு அன்புருவே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

வலது பாத காயமே பலம் மிகத் தரும் நற்கனியே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

இடது பாதக் காயமே திடம் மிகத் தரும் தேனமுதே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

திருவிலாவின் காயமே அருள் சொரிந்திடும் ஆலயமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

காணிக்கை பகுதி
இன்று நாம் தருகின்ற காணிக்கை எருசலேமில் உள்ள இயேசு பாடுபட்டு இறந்து, உயிர்த்த புனித பூமியை பராமரிக்க அனுப்பி வைக்கப்படும்

திருவிருந்து பகுதி முன்னுரை
அனைவரும் எழுந்து நிற்போம். இன்றைய வழிபாட்டின் இறுதி பகுதியை அடைந்திருக்கிறோம். திருச்சபையின் திருவழிபாட்டில் திருப்பலியும், திருவருட்சாதனங்களும் நடைபெறாத ஒரே நாள் பெரிய வெள்ளிதான். ஏனென்றால் திருப்பலியில் நாம் நினைவு கூர்ந்து புதுபிக்கும் கல்வாரி நிகழ்ச்சிகளை இன்றைய சிலுவைப்பாடுகள் மூலம் இயேசு நிகழ்த்திவிட்டார். எனவே நேற்றைய திருப்பலியில் வசீகரம் செய்யப்பட்ட பரிசுத்த நற்கருணை இப்போது பீடத்திற்கு கொண்டுவரப்படுகின்றது. ஆண்டவரின் பாடுகளைத் தியானித்து அதில் பங்கேற்று அதன் பலனை முழுமையாய் பெறும் ஏக்கத்தோடு திருவிருந்தில் பங்கு பெறுவோம்.

நற்கருணை வழங்கியபின், அதிகாரமுள்ள மற்றொரு பணியாளர் நற்கருணைப் பாத்திரத்தைக் கோயிலுக்கு வெளியே தகுதியான இடத்திற்குக் கொண்டுபோய் வைப்பர் அல்லது வேறு வழியில்லையென்றால், அதை நற்கருணைப் பேழையில் வைக்கலாம்.

இறுதியில்
சிலுவை யூதருக்கு தடைக்கல்லாகவும், பிற இனத்

பெரிய வியாழன் - ஆண்டவரின் இராவுணவுமாலைத் திருப்பலி    திருச்சபையின் மிகப் பழமையான வழக்கப்படி, இறைமக்கள் பங்குபெறாத திருப...
29/03/2018

பெரிய வியாழன் - ஆண்டவரின் இராவுணவு

மாலைத் திருப்பலி

திருச்சபையின் மிகப் பழமையான வழக்கப்படி, இறைமக்கள் பங்குபெறாத திருப்பலிகள் எல்லாம் இன்று தடை செய்யப்படும். மாலை வேளையில், வசதியான நேரத்தில், ஆண்டவருடைய இராவுணவுத் திருப்பலி இறைமக்கள் அனைவரும் முழுப் பங்கேற்க, கொண்டாடப்படும். அதில் குருக்கள், திருப்பணியாளர்கள் எல்லாரும் தத்தம் பணி புரிவார்கள். திருத்தைலத் திருப்பலி அல்லது மக்கள் நலனுக்காக வேறு திருப்பலி ஒப்புக்கொடுத்த குருக்கள் மீண்டும் மாலையில் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றலாம். இறைமக்களின் நலனைக் கருதி, கோயிலிலோ சிற்றாலயங்களிலோ, மாலையில் அல்லது மிகமிகத் தேவையானால் காலையில், மற்றொரு திருப்பலி ஒப்புக்கொடுக்க ஆயர் அனுமதி வழங்கலாம். மாலைத் திருப்பலியில் பங்கேற்க யாதொரு வழியும் அற்றவர்களுக்கமட்டும் காலைத் திருப்பலிக்கு அனுமதி தரலாம்: இத்தகைய அனுமதி ஒருசிலரின் தனி வசதிக்காக அளிக்கக்கூடாது. மேலும், மாலையில் நடக்கும் முக்கியமான திருப்பலிக்கு இது ஊறுவிளைவிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
திருப்பலியில் மட்டும் இறைமக்களுக்கு நற்கருணை வழங்கலாம்: நோயாளிகளுக்கு எந்த நேரத்திலும் திருவுணவு வழங்கலாம்.

தொடக்கச் சடங்கும் இறைவாக்கு வழிபாடும்

திருப்பலி தொடங்குமுன் நற்கருணைப் பேழை வெறுமையாயிருக்கவேண்டும். இன்றும் மறுநாளும் மக்களுக்குத் திருவுணவு வழங்கப் போதுமான திரு அப்பத்தை இத்திருப்பலியில் வசீகரிக்க வேண்டும்.

வருகைப் பல்லவி (கலா 6:14)

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையில்தான் நாம் பெருமை கொள்ள வேண்டும்: அவரிலேதான் நமக்கு மீட்பும் உயிரும் உயிர்ப்பும் உண்டு; அவராலேதான் நாம் ஈடேற்றமும் விடுதலையும் அடைந்தோம்.

முன்னுரை

இயேசுவின் பாஸ்கா விழாவை இன்று கொண்டாடுகின்றோம். பாஸ்கா என்றால் கடத்தல் என்று பொருள் பழைய ஏற்பாட்டில் யாவே கடவுளின் இரக்கத்தினால் பாரவோனின் ஆதிக்கத்திலிருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும் இஸ்ரயேல் மக்கள் செழிப்புமிக்க... வளமையான கானான் தேசத்திற்குக் கொண்டுவரப்பட்டார்கள். அதாவது பாஸ்கா என்ற கடத்தல் நிகழ்வின் வழியாகத் தீமையின் ஆதிக்கத்திலிருந்து கடந்து வந்து இறைவனை பற்றிக்கொண்டனர். ஆனால் இன்று உலகம் முடியும் வரை எந்நாளும் உங்களோடு இருப்பேன் என்று சொன்ன இயேசு தன்னை உடைத்து தனது உடலையும் இரத்தத்தையும் நம்மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாக நமக்கு உணவாகத் தருகின்றார். அத்தோடு தன் மீட்புப் பணி இவ்வுலத்தில் தொடர குருத்துவத்தையும் ஏற்படுத்துகின்றார்.

இத்தருணத்தில் இயேசு தன்னல நாட்டமின்றி இந்த மானிடரின் மீட்புக்காக தன்னையே வழங்கியதுபோல நம் அருகில் வாழும் மனிதர்களை அன்பு செய்துவாழவும், மேலும் குருக்கள் ஆண்டினை கொண்டாடும் நாம், குருக்கள் அனைவரும் இயேசு செய்த பணியை மனத்துணிவுடனும், மனித மாண்புடனும் தொடர்ந்து செய்து நீதி, அன்பு சகோதரத்துவம், சமுத்துவம் போன்றவற்றை நிலைநாட்டாவும், இயேசுவை மக்களுக்கு கொடுப்பவர்களாகவும் திகழ வேண்டிய வரத்தை தந்தருள குருக்களுக்காகவும் நமக்காகவும் சிறப்பாக இத்திருப்பலியில் செபிப்போம்.

இன்றைய திருவழிபாடானது நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளது.

1.இறைவார்த்தை வழிபாடு
2.பாதம் கழுவும் சடங்கு
3.நற்கருணை வழிபாடு
4.நற்கருணை இடமாற்றம் பவனி.

இந்த வாழிபாட்டு நிகழ்வுகளில் பொருளுணர்ந்து பக்தியோடு பங்கெடுப்போம். வழக்கம் போல திருப்பலி தொடங்கிறது. 12 ஆண்களுடன் குருவானவர் பவனியாக பீடம் நோக்கி வருவார்.இன்று உன்னதங்களிலே கீதம் பாடும்போது அனைத்து மணிகளும் ஒலிக்க வேண்டும். இது முதல் பாஸ்கா திருவிழிப்பு வரை மணி ஒலிக்காது.

**************************************"""********

1. இறைவார்த்தை வழிபாடு

முதல் வாசகம் முன்னுரை

பாஸ்கா என்றால் கடந்து செல்லுதல் என்று பொருள். தங்கள் சொந்த நாட்டை விட்டு, எகிப்தில் அடிமைகளாக வாழ்ந்த தம் மக்களை கடவுள் விடுவித்து, கானான் தேசத்திற்குக் கொண்டு வந்தார். அந்த நிகழ்வுதான் பாஸ்கா, நாமும் பாவத்திலிருந்து விடுபட்டு இறைவனோடு இணைய நம் பழைய நிலையிலிருந்து கடந்துவர நம்மை அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

முதல் வாசகம் விடுதலை பயணம் 12: 1-8, 11-14

தியானப்பாடல்: சங் 116 12-13, 15-16, 17-18

நாம் ஆசீர்வதிக்கும் கிண்ணம் கிறிஸ்துவின் இரத்ததில் பங்குகொள்ளல் அன்றோ!

ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும்
நான் என்ன கைம்மாறு செய்வேன்?
மீட்புக்காக நன்றிகூறி கிண்ணத்தைக் கையில் எடுத்து,
ஆண்டவருடைய திருப் பெயரைச் சொல்லி கூப்பிடுவேன்.

ஆண்டவர் தம் அடியாரின் மரணம்
அவருடைய பார்வையில் மிக மதிப்புக்குரியது
நான் உம் அடியேன் உம் அடியாளின் மகன்
என் கட்டுகளை நீர் அவிழ்த்துவிட்டீர்.

புகழ்ச்சிப் பலியை உமக்குச் செலுத்துவேன்
ஆண்டவருடைய திருப்பெயரை கூவி அழைப்பேன்
ஆண்டவருடைய மக்கள் அனைவரிடையேயும்
அவருக்கு என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்

இரண்டாம் வாசகம் முன்னுரை(1கொரி 11, 23-26)

அர்த்தமற்ற வழிபாடுகள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. வழிபாடுகள் வாழ்வாகும்போதுதான் வாழ்வில் மாற்றம் பிறக்கிறது. வாழ்வு சிறக்கிறது. எனவே திருப்பலியின் போது இயேசுவின் உடலை உண்டு அவரது இரத்தததைப் பருகுவது என்பது வெற்றுச் சடங்காக மாறிவிடாமல் நாம் அன்றாட வாழ்வில் இறையரசை வாழ்வாக்க வேண்டும் என்ற புனித பவுலின் வார்த்தைகளுக்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் 1 கொரி 11:23-26

நற்செய்திக்குமுன் வசனம் யோவான் 13:34

புதியதோர் கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.

********************************"*"************
2. பாதம் கழுவும் சடங்கு

யூத சமுகத்தில் தன் வீட்டில் இருக்கும் பணியாளர் வெளியில் சென்று வரும் தனது தலைவரின் கால்களைக் கழுவுவது வழக்கம். ஆனால் இதே சமுதாயத்தில் பிறந்த இயேசு ஒரு வித்தியாசமான செயலைச் செய்கிறார். பணிவிடைப் பெற அன்று,பணிவிடைப் புரியவே வந்தார் என்று வார்த்தையில் மட்டுமல்ல. தன் சீடர்களின் பாதங்களை கழுவி அவ்வார்த்தைகளுக்கு உருவம் கொடுத்தார் இயேசு. தன்னையே தாழ்த்திக் கொண்டார் இறைமகன் இயேசு. எனவே இப்பாதம் கழுவும் சடங்கில் பார்வையாளர்களாக, வேடிக்கையாளர்களாக இல்லாமல், நாம் சாதி, மதம், இனம், தூய்மைத்தீட்டு, ஏழைகள், பணக்காரர்கள், இருப்பவர், இல்லாதவர் போன்ற மனிதத்தை உருக்குலைக்கும் வேற்றுமைகளைக் களைந்து அருகில் வாழும் மனிதர் இறைவன் படைப்பு என்பதை உணர்ந்து இச்சடங்கில் பங்குபெறுவோம்.

குறிப்பு:பாதம் கழுவும் சடங்கு முடிந்தபின் விசுவாசிகளின் மன்றாட்டு நடைபெறும். இத்திருப்பலியில் விசுவாச அறிக்கை சொல்வதில்லை.

பல்லவி 2 அரு 13:6-8
"ஆண்டவரே, நீரோ என் பாதங்களைக் கழுவுவது?"
அதற்கு இயேசு: "நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்
உனக்கு என்னோடு பங்கில்லை" என்றார்.

சீமோன் இராயப்பரிடம் அவர் வரவே
இராயப்பர் அவரை நோக்கிச் சொன்னது:
"ஆண்டவரே, நீரோ என் பாதகங்களைக் கழுவவது?"

அதற்கு இயேசு: "நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்
உனக்கு என்னோடு பங்கில்லை" என்றார்.
"நான் செய்வது இன்னதென்று உனக்கு
இப்போது தெரியாது, பின்னரே விளங்கும்."

"ஆண்டவரே, நீரோ என் பாதங்களைக் கழுவுவது?"
அதற்கு இயேசு: "நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்
உனக்கு என்னோடு பங்கில்லை" என்றார்.

இறைமக்களின் வேண்டல்

1. பணிவிடை புரியவே வந்தேன் என்று சொன்ன இறைவா!
திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, அவரோடு இணைந்து பணியாற்றும் ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவரையும் உடல் உள்ள ஆன்ம நலனோடு வாழவும், இறைமக்களை ஒருவருக்கொருவர் பணிபுரிந்து வாழ்பவர்களாக வழிநடத்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

2. வழிநடத்திடும் மாபரனே!
எங்கள் நாட்டை வழிநடத்திடும் தலைவர்கள் சுயநலத்தில் மூழ்கிடாது, நாட்டு மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தந்து, அமைதியாக மக்களை வழிநடத்திட வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்பின் இறைவா!
நீர் சீடர்களின் பாதங்களை கழுவி அன்பின் முக்கியத்துவத்தை முழுçமாயக எங்களுக்கு உணர்த்தினீர். இதை உணர்ந்து, உமது அன்பின் அடிச்சுவட்டில் நாங்கள் தொடர்ந்து நடக்கவும், எங்களுடைய உள்ளத்தையும், சிந்தனைகளையும் பிறருக்கு அர்பணித்திடவும் வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஒப்பற்ற குருவே!
தனிக்குருத்துவத்தில் உம் பணி செய்யும் குருக்கள் யாவரும் தங்களது வாழ்வில் எதிர்கொள்ளும் போரட்டங்களில் வெற்றிக்கொள்ள தேவையான மன உறுதியைçயும், ஆற்றலையும் தந்து வழிநடத்திடவும், பொது குருத்துவத்தில் உமது வழி வாழ அழைப்பு பெற்ற இறைமக்களும் அவ்வாறே வாழ்ந்திடவும் வரம்தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

**********************"***"*"********************
3.நற்கருணை வழிபாடு

காணிக்கைப் பாடல் : அன்பும் நட்பும் எங்குள்ளதோ....

அன்பும் நட்பும் எங்குள்ளதோ அங்கே இறைவன் இருக்கின்றார் -2

கிறிஸ்துவின் அன்பு நம்மை எல்லாம் ஒன்றாய் கூட்டி சேர்த்ததுவே
அவரில் அக்களித்திடுவோம் யாம் அவரில் மகிழ்சி கொள்வோமே
ஜீவிய தேவனுக்கு அஞ்சிடுவோம் அவருக்கன்பு செய்திடுவோம்
நேரிய உள்ளத்துடனே யாம் ஒருவரை ஒருவர் நேசிப்போம்

எனவே ஒன்றாய் நாமெல்லாம் வந்து கூடும் போதினிலே
மனதில் வேற்றுமை கொள்ளாமல் விழிப்பாய் இருந்து கொள்வோமே
தீய சச்சரவுகள் ஒளிந்திடுக பிணக்குகள் எல்லாம் போய் ஒழிக
நமது மத்தியில் நம் இறைவன்கிறிஸ்து நாதர் இருந்திடுக

முக்தி அடைந்தோர் கூட்டத்தில் நாமும் ஒன்றாய் சேர்ந்து மனம்
மகிழ்ந்து கிறிஸ்து இறைவா நின் மகிமை வதனம் காண்போமே
முடிவில்லாமல் என்றென்றும் நித்திய காலம் அனைத்திற்கும்
அளவில்லாக மாண்புடைய பேரானந்தம் இதுவே யாம்

(காணிக்கை மன்றாட்டுடன் திருப்பலி தொடரும், நன்றி மன்றாட்டு முடிந்த பிறகு நற்கருணை இடமாற்றப் பவனி)

************************************************
4.நற்கருணை இடமாற்றம்

இயேசு சென்றவிடமெல்லாம் நன்மைகளையே செய்துகொண்டுச் சென்றார். என்னை அவர் தொடமாட்டாரா? என்னை அவர் பார்க்க மாட்டாரா? என் குரலுக்கு அவர் செவி கொடுக்கமாட்டாரா என இயேசுவை எண்ணி ஏங்கியோர் பலருண்டு அவரை அண்டிச் சென்றவர்கள் அருள்மழையில் நனைந்தார்கள். அவரரை அனுகியோர் அவரின் ஆசிர்வாத்தில் ஆனந்த கூத்தாடினார்கள். இன்றும் அதே இயேசு அப்ப வடிவில் நம் மத்தியில் பவனி வரப் போகின்றனர். இயேசுவை திறந்த உள்ளத்தோடு ஏற்க மறுத்த யூத குருமார்கள், பிலாத்து, ஏரோதுவைப் போல் அல்லாமல் நம் உள்ளத்தில் பச்சைக் கம்பளம் விரித்து அவருக்கு வரவேற்பு கொடுப்போம். அவரின் ஆசிர்வாதத்தால் நிரப்பப்படுவோம்.

பாடுவாய் என் நாவே மாண்புமிக்க உடலின் இரகசியத்தை
பாரின் அரசர் சீருயர்ந்த வயிற்றுதித்த கனியவர் தம்
புதலத்தை மீட்கச் சிந்தும் விலைமதிப்பில்லா துயர்ந்த
தேவ இரத்த இரகசியத்ததை எந்தன் நாவே பாடுவாயே

அவர் நமக்காய் அளிக்கப்படவே மாசில்லாத கன்னி நின்று
நமக்கென்றே பிறக்கலானார் அவனி மீதில் அவர் வதிந்து
அரிய தேவ வார்த்தையான வித்து அதனை விதைத்த பின்னர்
உலக வாழ்வின் நாளை மிகவே வியக்கும் முறையில் முடிக்கலானார்

இறுதி உணவை அருந்த இரவில் சகோதரர்கள் யாவரோடும்
அவர் அமர்ந்து நியமனத்தின் உணவை உண்டு நியமனங்கள்
அனைத்தும் நிறைவு பெற்ற பின்னர் பன்னிரண்டு சீடருக்குத்
தம்மைத்தாமே திவ்விய உணவாய்த் தம் கையாலே அருளினாரே

ஊன் உருவான வார்த்தையானவர் வார்த்தையாலே உண்மை அப்பம்
அதனைச் சரீரம் ஆக்கினாரே இரசமும் கிறிஸ்து இரத்தமாகும்
மாற்றம் இது நம் மனித அறிவை முற்றிலும் கடந்த தெனினும்
நேர்மையுள்ளம் உறுதிகோள்ள மெய் விசுவாசம் ஒன்றே போதும்

அவ்விடத்தை அடைந்ததும் குரு நற்கருணைப் பாத்திரத்தை வைப்பார்: சாம்பிராணியிட்டபின் முழந்தாளிட்டுத் தூபம் காட்டுவார். அப்போது "மாண்புயர் இவ்வருட் சாதனத்தை" என்னும் அடி பாடப்படும். பின் பேழை பூட்டப்படும்.
சிறிது நேரம் மௌனமாக மன்றாடியபின் குருவும் பணியாளரும் தாழ்ந்து பணிந்து வணங்கிவிட்டுத் திருப்பண்ட அறைக்குச் செல்வர்.
பின் பீடத்தின் அணிகள் எல்லாம் நீக்கப்படும்: கூடுமானால் சிலுவைகள் எல்லாம் கோயிலிலிருந்து அகற்றப்படும். அகற்ற முடியாத சிலுவைகள் திரையிடப்படும்.
மாலைத் திருப்பலியில் பங்கெடுத்தவர்கள் திருப்புகழ்மாலையின் மாலைப்புகழ் சொல்வது இல்லை.
இடத்தின் வழக்கத்திற்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்றவாறு நற்கருணை ஆராதனை இரவிலும் நடைபெற இறைமக்களுக்கு அறிவுரை கூறவேண்டும்; ஆனால் நள்ளிரவுக்குப் பின் ஆராதனை வெளியாடம்பரமின்றி நடைபெறவேண்டும்.

Address

Rc Church Street
Ambasamudram
627401

Website

Alerts

Be the first to know and let us send you an email when புனித வளனார் ஆலயம்,அம்பாசமுத்திரம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to புனித வளனார் ஆலயம்,அம்பாசமுத்திரம்:

Share