17/02/2017
கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை விருது - 2017
கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை 2017ஆம் ஆண்டுக்கான கவிஞர் ஆத்மாநாம் விருதுக்கு பரிந்துரைகளை வரவேற்கிறது.
டிசம்பர் 2013 -ல் இருந்து - 2014, 2015 - டிசம்பர் 2016 வரை வெளிவந்த கவிதைத் தொகுப்புகள் குறித்த பரிந்துரைகளைப் பிரதியுடன் சேர்த்து அனுப்பும்படி கேட்டிருந்தோம். பிரதிகள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 10, 2017 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எழுத்தாளர் பெருமாள்முருகன், கவிஞர் க. மோகனரங்கன், கவிஞர் சுகுமாரன் ஆகியோர் நடுவர்களாகவும், கவிஞர் கலாப்ரியா நெறியாளராகவும் செயல்படுவார்கள்.
இதுவரை பரிந்துரைகள் வரப்பெற்ற பிரதிகளின் பட்டியலை இணைத்துள்ளோம்.
1. வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை - பேயோன்
2. திருச்சாழல் - கண்டராதித்தன்
3. நீர்ச்சாரி - பத்மபாரதி
4. குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம் - ந. பெரியசாமி
5. ஆரஞ்சு மணக்கும் பசி - ஸ்டாலின் சரவணன்
6. அப்பாவின் வேட்டி - பொம்பூர் குமரேசன்
7. வாயாடிக் கவிதைகள் - பெருந்தேவி
8. அழுக்கு சாக்ஸ் - பெருந்தேவி
9. இக்கடல் இச்சுவை - பெருந்தேவி
10. ஒற்றைப் பகடையில் எஞ்சும் நம்பிக்கை - கீதா சுகுமாரன்
11. மகளுக்குச் சொன்ன கதை - சே. பிருந்தா
12. தேன் இனிப்பது எல்லோருக்கும் தெரியாது - உமா தேவி
13. மண்டியிடா மானம் - ப. சுஜந்தன்
14. வேளிமலைப் பாணன் - ஜி. எஸ். தயாளன்
15. நடுக்கடல் மெளனம் - தேவேந்திரபூபதி
16. நீளா - பா. வெங்கடேசன்
17. எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை - ஒளவை
18. இன்னும் வராத சேதி - ஊர்வசி
19. இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் - கருணாகரன்
20. பெருங்கடல் போடுகிறேன் - அனார்
21. ஒவ்வா - ஸர்மிளா ஸெய்யித்
22. இளவரசி கவிதைகள் - ஆனந்த்
23. யாக்கையின் நீலம் - ப்ரேமா ரேவதி
மொழியாக்கக் கவிதைகள்
கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை டிசம்பர் 2013-ல் இருந்து - 2014, 2015 - டிசம்பர் 2016 ஆம் ஆண்டுகளில் பிற மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கவிதை தொகுப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் தொகுப்பிற்கு ரூபாய் 10,000/- உள்ளடக்கிய 'கவிஞர் ஆத்மாநாம் மொழிபெயர்ப்பு விருது'க்கு வரப்பெற்ற பிரதிகளின் பட்டியலை இணைத்துள்ளோம். பிரதிகள் அனுப்பவேண்டிய கடைசி தேதி மார்ச் 10 - 2017.
1. துயிலின் இரு நிலங்கள் - பிற மொழிக் கவிதைகள்,
தமிழில்: எஸ் சண்முகம்
2. அமைதியின் நறுமணம் - இரோம் ஷர்மிலா,
தமிழில்: அம்பை
3. எங்கே அந்தப் பாடல்கள்? - ஆப்பிரிக்கப் பெண் கவிதைகள்,
தமிழில்: ரவி
4. குவண்டனமோ கவிதைகள் - கைதிகளின் குரல்,
தமிழில்: மண்குதிரை
5. துயர் நடுவே வாழ்வு - திகார் பெண்களின் கண்ணீர் கவிதைகள்,
தமிழில்: எம். கோபாலகிருஷ்ணன்
அனுப்ப வேண்டிய முகவரி :
கிருஷ்ண பிரபு,
எண்: 6, நிர்பாணி சுப்பாராவ் தெரு, LD வங்கி அருகில், பொன்னேரி தாலுகா, திருவள்ளூர் மாவட்டம், 601 204
தொடர்புக்கு: வேல்கண்ணன் செல்பேசி: 9865887280
பரிந்துரைகளை அனுப்பக் கடைசி தேதி மார்ச் 10, 2017.
பரிந்துரைகளைப் பதிப்பாளர், வாசகர், மொழிப்பெயர்ப்பாளர் பரிந்துரைக்கலாம்.
கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளையின் மொழிபெயர்ப்பு விருதுக்கான நடுவர்களாக மொழிபெயர்ப்பாளர் R. சிவகுமார், G. குப்புசாமி மற்றும் எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் செயல்படுவார்கள்.
இங்கணம்:
வேல் கண்ணன்,
அறங்காவலர்,
கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை,
சென்னை.